தேர்தல் பணிகளில் புகாரா..1950 எண்ணில் கால் செய்யுங்க – தேர்தல் அதிகாரி தகவல்!

0
தேர்தல் பணிகளில் புகாரா..1950 எண்ணில் கால் செய்யுங்க - தேர்தல் அதிகாரி தகவல்!
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான பணிகள் மிகவும் தீவிரமாக நடந்து வரும் நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இன்று செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.

முக்கிய தகவல்கள்:

இந்திய அரசின் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் குறித்தான அறிவிப்புகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான நிலையில் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் மொத்தம் ஆறு கோடியே 23 லட்சத்து 26 ஆயிரத்து 901 வாக்காளர்கள் உள்ளனர். இதுவரை மொத்தம் 68,144 வாக்கு மையங்கள் தமிழகத்தில் இருந்து வந்த நிலையில் நடப்பாண்டில் கூடுதலாக 177 வாக்கு சாவடிகளை அமைக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

தேர்தல் பணிகளுக்காக ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 165 கம்பெனி துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதுவரையிலும் தமிழகம் முழுவதும் ரூபாய் 69.70 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் 1950 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு செய்தியாளர் சந்திப்பில் இன்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!