பள்ளி / கல்லூரிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை – அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

0
பள்ளி / கல்லூரிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை - அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

குவைத் நாட்டின் அமைச்சர்கள் குழு ஈகை திருநாளை முன்னிட்டு 5 நாட்கள் தொடர் விடுமுறை அறிவித்துள்ளது.

5 நாட்கள் விடுமுறை:

ஈகை திருநாள் என்பது முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகை ஆகும். இந்த பண்டிகையை முன்னிட்டு குவைத் நாட்டு அமைச்சர்கள் குழு மூன்று நாட்கள் விடுமுறை வழங்க முடிவு எடுத்துள்ளது. இதன் படி, குவைத் நாட்டில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு ஏப்ரல் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. இதனை தொடர்ந்து வரும் ஏப்ரல் 12ம் (வெள்ளி கிழமை) மற்றும் 13ம் தேதி (சனிக்கிழமை) வார இறுதி நாள் விடுமுறை என்பதால் இந்த நாட்டு மக்களுக்கு தொடர்ச்சியாக 05 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணிகளில் புகாரா..1950 எண்ணில் கால் செய்யுங்க – தேர்தல் அதிகாரி தகவல்!

இதனை போலவே சவுதி அரேபியாவில் ஈகை திருநாளை பொது மக்கள் கொண்டாட ஏப்ரல் 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசனது மார்ச் 23ம் தேதி வெளியிட்டது. இப்பகுதியை சேர்ந்த மக்களுக்கும் ஏப்ரல் 12, 13ம் தேதிகள் வார இறுதி நாட்கள் என்பதால் தொடர்ந்து 06 நாட்கள் விடுமுறை வழங்கப்படவுள்ளது. இவ்விடுமுறைகள் அனைத்தும் முடிந்ததும் ஏப்ரல் 14ம் தேதி பள்ளி / கல்லூரிகள் திறக்கப்படும், ஊழியர்கள் வேலைக்கு திரும்புவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!