கல்லூரிகளின் தரத்தை உயர்த்த தனி குழுக்கள் – பல்கலைக்கு யு.ஜி.சி உத்தரவு!!!
யு.ஜி.சி தலைவர் அவர்கள் அனைத்து பல்கலைக்கழக மற்றும் கல்லூரிகளில் தலைவர்களின் துணை வேந்தர்களுக்கும் கல்லூரிகளின் தசரத்தை உயர்த்துவது தொடர்பாக அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
பல்கலைகழக மானியக்குழு:
இந்தியாவின் பல்கலைகழக மானியக்குழு (யுஜிசி) என்பது இந்தியாவில் உள்ள பல்கலை கழகங்களின் கல்வியினை ஒருங்கிணைப்பது , மேற்பார்வையிடுவது, கல்வியின் தரத்தை உறுதி செய்வது போன்ற பணிகளுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பாகும். அரசு பல்கலை கழகங்களுக்கு தேவையான மானிய நிதியினை வழங்கும் பணியையும் செய்கிறது. மேலும் ஆண்டு தோறும் கல்வி உதவி தொகை தேவைப்படும் மாணவர்களுக்கான உதவி தொகையையும் வழங்குகிறது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் கூடுதல் கட்டுப்பாடுகள்- அரசு எச்சரிக்கை
தரம் உயர்த்தல்:
பல்கலைக்கழகங்களின் தரத்தை உயரத்துவதற்காக தனியாக குழு அமைத்துக் கொள்ளலாம் என்பது பற்றி பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பல்கலை மானியக் குழுவானது அனைத்து பல்கலைகள் மற்றும் கல்லூரிகளின் தலைவர்கள் மற்றும் துணை வேந்தர்கள் அனைவர்க்கும் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அறிக்கை:
பல்கலை மானியக் குழுவின் தலைவர் டி.பி.சிங் அவர்கள், நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளை மற்றும் பல்கலைகளின் தரத்தை உயர்த்தவேண்டியது கல்லூரி நிர்வாகத்தினரின் பொறுப்பாகும். ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் முறையில் கல்லூரிகள் சிறப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைகளிலும் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் 5 முதல் 10 பேர் அடங்கிய குழுக்களை அமைக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்