தமிழகத்தில் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் கூடுதல் கட்டுப்பாடுகள்- அரசு எச்சரிக்கை

0
நெறிமுறைகளை முறையாக பின்பற்றாவிட்டால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் - அரசு எச்சரிக்கை!!
நெறிமுறைகளை முறையாக பின்பற்றாவிட்டால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் - அரசு எச்சரிக்கை!!
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் கூடுதல் கட்டுப்பாடுகள்- அரசு எச்சரிக்கை

தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு நெறிமுறைகளை முறையாக மக்கள் பின்பற்றாவிட்டால் இன்னும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தமிழக அரசு மக்களை எச்சரித்துள்ளது.

முக்கிய ஆலோசனை:

தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் 9, 10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு மாரு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மீண்டும் நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள் தலைமையில் தமிழகத்தில் உள்ள முக்கிய மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடந்தது. ஆலோசனையில் பல முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்த வேண்டும் – ஆசிரியர் சங்க தலைவர் கோரிக்கை!!

மருத்துவர்களின் கருத்துக்கள்:

மக்கள் சமீப காலமாக முகக்கவசத்தின் முக்கியத்துவத்தை மறந்து செயல்படுகின்றனர். இதனால் தொற்று அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாகும். அரசு பரிந்துரைத்துள்ள சுகாதார வழிமுறைகளை இன்னும் தீவிரமாக செயல்படுத்த வேண்டும். தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் தடுப்பூசிகள் போடுவதற்கான வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் அறிவித்துள்ளனர்.

முக்கிய முடிவுகள்:

நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் செயல்படுத்த வேண்டிய நடைமுறைகள் குறித்து முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டது. அரசு அறிவித்துள்ள அரசாணையில் உள்ளபடி, உள்ளரங்குகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 600 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

இந்த உத்தரவை மீறியவர்கள் மீது அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். கணினி சார்ந்த அலுவலகங்கள் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மாவட்டங்களில் கொரோனா கவனிப்பு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசின் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் முறையை பின்பற்ற தவறினால் இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசு சார்பில் எச்சரிக்கட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!