மத்திய அரசின் புதிய ஒழுங்குமுறை கொள்கை – ட்விட்டர் சம்மதம்!!
மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ள டிஜிட்டல் மீடியா ஒழுங்குமுறை விதிகளை தற்போது நீண்ட இழுபறிக்கு பின்பு ட்விட்டர் நிறுவனம் ஏற்றுக்கொள்வதாக சம்மதம் தெரிவித்துள்ளது.
புதிய ஒழுங்குமுறை கொள்கை:
இந்தியாவில் தற்போதைய காலங்களில் வாட்ஸ் ஆப், முகநூல், ட்விட்டர் போன்ற முக்கிய சமூக வலைத்தளங்களில் பல போலியான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இதனால் அவ்வப்போது பல்வேறு பிரச்சனைகளும் கிளம்பி வந்த நிலையில் இதனை சரிசெய்யும் வகையில் மத்திய அரசு புதிய ஒழுங்குமுறை கொள்கையை அறிவித்தது. மேலும் இதற்கு சம்மதம் தெரிவித்தால் மட்டுமே இந்தியாவில் குறிப்பிட்ட செயலிகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இதன் தொடக்கத்தில் எந்த நிறுவனமும் இது குறித்த அறிவிப்பு வெளியிடாத காரணத்தினால் இந்தியாவில் வாட்ஸ் ஆப், முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்கள் இயங்க தடை விதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியானது. இதனை தொடர்ந்து வாட்ஸ் ஆப், முகநூல் புதிய விதிமுறை கொள்கையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. தற்போது நீண்ட இழுபறிக்கு பின்பு புதிய ஒழுங்குமுறை கொள்கைக்கு ட்விட்டர் நிறுவனமும் சம்மதம் தெரிவித்துள்ளது.
தமிழக போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கல் – முதல்வர் உத்தரவு!
அந்த வகையில் இந்தியாவில் எழும் புகார்களை கவனித்து நடவடிக்கை எடுப்பதற்காக இடைக்கால குறைதீர்ப்பு அதிகாரியாக தர்மேந்திரர் சதூர் என்பவரை ட்விட்டர் நியமித்துள்ளது. ஆனால் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை நீக்குதல், புகார்களை கையாள்வது, அரசின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்பது ஆகியவற்றினை கவனிப்பதற்கு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் அவர் இந்தியராக இருக்க வேண்டும் என்றும் புதிய கொள்கை கூறுகிறது. ஆனால் இந்த அதிகாரிகள் நியமிப்பது குறித்து ட்விட்டர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.