தமிழக போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கல் – முதல்வர் உத்தரவு!

0
தமிழக போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கல் - முதல்வர் உத்தரவு!
தமிழக போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கல் - முதல்வர் உத்தரவு!
தமிழக போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கல் – முதல்வர் உத்தரவு!

தமிழகத்தில் போக்குவரத்து துறை ஊழியர்களுக்கான நிலுவையில் உள்ள ஓய்வூதியம் வழங்கும் பணிகளை முதல்வர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார்.

நிலுவைத்தொகை:

தமிழகத்தில் போக்குவரத்து துறையில் உள்ள ஊழியர்களின் பல கோரிக்கைகள் மற்றும் இந்த கொரோனா காலத்தில் அயராது உழைக்கும் அவர்களின் பணியினை பெருமை படுத்தும் விதமாக போக்குவரத்து பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்கவும் தமிழக முதல்வருக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

முன்னதாக கடந்த ஆட்சியில் போக்குவரத்து பணியாளர்கள் தங்களது பல கோரிக்கைகளையும் அரசு ஏற்க வேண்டும் என்று பல முறை தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தை செய்து வந்தனர். இந்நிலையில் அவர்களின் கோரிக்கையை ஏற்று ஓய்வூதியம் பெறுபவர்களின் நிலுவையில் உள்ள பணபலன்களை வழங்குவதற்கு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இதுவரை நிலுவையில் உள்ள ரூ.497 கோடி தொகையை வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

CISCE வாரிய 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து – அதிகாரப்பூரவ அறிவிப்பு!!

இதன் மூலம் 2,457 ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைக்கும். முதல்கட்டமாக 6 ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கான நிலுவை தொகையின் காசோலையை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வழங்கி இந்த பணியினை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!