CISCE வாரிய 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து – அதிகாரப்பூரவ அறிவிப்பு!!
இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் வாரியத்திற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்வு வாரியத்தின் செயலாளர் ஜெர்ரி அராத்தூன் தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்வு ரத்து:
இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் நடப்பு ஆண்டுகளுக்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மே 4ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. தொடர்ந்து கொரோனா இரண்டாம் அலையின் பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தேர்வு வாரியம் அறிவித்தது.
TN Job “FB Group” Join Now
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட சிபிஎஸ்இ வாரியத் தேர்வு ரத்து செய்ததன் அடிப்படையில் CISCE முடிவு எடுத்துள்ளது. மாணவர்களின் நலனுக்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கவலையை முடிவுக்கு கொண்டு வருவதாக பிரதமர் அறிவித்தார்.
தமிழகத்தில் ஜூன் 7க்கு பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் – முதல்வர் ஆலோசனை!
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி மதிப்பெண்களை வழங்கும் முறை குறித்து கல்வி வாரியம் விரைவில் அறிவிக்கவும், இதே போல், CICSE வாரியம் கடந்த வாரத்தில் பள்ளிகள் 12ம வகுப்பு மாணவர்களின் 11ம் வகுப்பு மதிப்பெண்களை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு வெளியிட்டது. இது தொடர்பாக CISCE ன் செயலாளர் ஜெர்ரி அராத்தூன் அவர்கள், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து மாணவர்களுக்கான மாற்று மதிப்பீடு முறைகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Class 12 marks should only be assessed by 12 th preboard marks alone and not with previous yrs marks as students study with seriousness for their career in 12 only than in 11 th.