தமிழக ரேஷன் கடைகளில் 13 மளிகைப் பொருட்கள் விநியோகம் – அமைச்சர் ஆலோசனை!!
தமிழக முதல்வரின் அறிவிப்பின் படி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 13 வகையான மளிகைப் பொருட்களை வழங்குவது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
மளிகைப் பொருட்கள் விநியோகம்:
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் மே 10 ஆம் தேதியில் இருந்து முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மே 31 ஆம் தேதி முதல் ஜூன் 7 ஆம் தேதி வரை தளர்வில்லா முழு ஊரடங்காக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசின் உத்தரவின் அடிப்படையில், ஊரடங்கு காலத்தில் பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் வீடுகள் தோறும் காய்கறிகள், மளிகை பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தமிழக போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கல் – முதல்வர் உத்தரவு!
இது தவிர ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 4 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதியை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் மாவட்டங்கள் தோறும் இரண்டு தவணைகளாக நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கூடுதலாக 13 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.
TN Job “FB Group” Join Now
முதல்வர் அறிவிப்பின் படி அனைத்து குடும்பத்துக்கும் 13 வகையான மளிகை பொருட்கள் வழங்குவது குறித்து முதல்வருடன், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டுள்ளார்.