57,000க்கும் மேற்பட்ட இந்தியர்களின் டிவிட்டர் கணக்கு ரத்து – இது தான் காரணம் நிறுவனம் விளக்கம்!
சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் அண்மையில் வாங்கினார். இவர் தலைமையேற்றது முதல் ட்விட்டரில் அதிரடி மாற்றங்கள் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது இந்தியாவில் மட்டும் சுமார் 57,000 ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர்:
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் சென்ற வருடம் ட்விட்டர் நிறுவனத்தை தான் வாங்கவிருப்பதாக அறிவித்தார். அதற்கான பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு ஒரு வழியாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில் திடீரென எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கும் முடிவில் இருந்து பின் வாங்கினார். அப்போது ட்விட்டர் ஒப்பந்தந்தை மீறி செயல்படுவதாக கூறி நீதிமன்றத்தின் உதவியை நாடியது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் எலான் மஸ்க் டிவிட்டரை வாங்க ஒப்பு கொண்டு தற்போது தலைமை பொறுப்பேற்றுள்ளார். இவர் ட்விட்டர் நிறுவனத்திற்கு வந்தது முதல் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் ட்விட்டர் CEO பணி நீக்கம் செய்யப்பட்டார். அதே போல சில ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து ட்விட்டரில் ப்ளூ டிக் பெறுபவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற தகவலும் வெளியானது.
தமிழகத்தில் நீடிக்கும் கனமழை.. நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை? – வெள்ளநீர் எதிரொலி!
Follow our Instagram for more Latest Updates
இத்தகைய மாற்றங்களுக்கு மத்தியில் 52,141 இந்திய ட்விட்டர் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ட்விட்டர் நிறுவனம் தனது விளக்கத்தை அளித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 25 வரை குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்கள் பரப்புவது தொடர்பாக ட்விட்டர் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் மத்திய அரசு 50 லட்சத்திற்கு மேற்பட்ட பயனர்களை கொண்ட சமூக வலைத்தளங்கள் தங்களது பயனர்களின் புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.