தமிழகத்தில் நீடிக்கும் கனமழை.. நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை? – வெள்ளநீர் எதிரொலி!
தமிழகத்தில் தொடர்ந்து இடைவிடாமல் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றும் கனமழை தொடர்வதால் நாளை பள்ளிகள் இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
தமிழகம் முழுவதும் மழை காலம் வந்து விட்டாலே பள்ளி மாணவர்களுக்கு அதிக அளவில் விடுமுறை வரும் என்பதால் குழந்தைகள் குஷியாகி விடுவார்கள். தினமும் காலை பள்ளிக்கு கிளம்புவதற்கு முன்பு தொலைக்காட்சியில் பள்ளி விடுமுறை குறித்த செய்தி வருகிறதா என்பதை சோதிக்கும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கனமழை பரவலாக பெய்து வருகிறது.
Exams Daily Mobile App Download
அதிலும், நேற்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. குறிப்பாக, நேற்றும், இன்றும் தமிழகம் மற்றும் புதுவைக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முதல் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து இருந்ததால், சென்னை உள்ளிட்ட நகரங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
தமிழக மெட்ரிக்குலேஷன் பள்ளி இயக்குனர் மாற்றம் – பள்ளிகல்வித்துறை அறிவிப்பு!
Follow our Instagram for more Latest Updates
இன்றும் கனமழை இடைவிடாமல் பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளநீர் வடியாமல் தேங்கி உள்ளது. இந்த நிலை நீடித்தால் நாளையும் சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.