தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி அன்று நடைபெற உள்ளது. அதனால் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க வசதிக்காக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
சிறப்பு பேருந்துகள்
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நகர்புற உள்ளாட்சிக்கான தேர்தல் நடைபெறாமல் உள்ளது. அதனால் தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு வருகிற பிப்ரவரி 19ம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக 19ம் தேதி அன்று தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு உண்டா? இல்லையா? உண்மை நிலவரம்!
இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ம் தேதி அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேயர் பதவிக்கான தேர்தல் மார்ச் 2ம் தேதி அன்று நடத்த உள்ளது. இதனை தொடர்ந்து தேர்தலை முன்னிட்டு வாக்குரிமை உள்ள அனைவரும் வாக்களிக்கும் வகையில் வருகிற 19ம் தேதி அன்று ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த விதியை மீறி செயல்படும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
டிகிரி முடித்தவரா? – தனியார் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..!
இதனை தொடர்ந்து சென்னையில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவர்களுக்கு வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டியிருக்கும். அதனால் அவர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி தேர்தல் தினத்துக்கு முந்தைய நாளான 18ம் தேதி அன்று கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் திருச்சி, கும்பகோணம், மதுரை உள்ளிட்ட போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு இயக்கப்படும் என்றும் பொதுமக்களின் தேவையை பொறுத்து மேலும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.