தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு உண்டா? இல்லையா? உண்மை நிலவரம்!
தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகாமல் உள்ளது. இந்த நிலையில் அவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்தாக வாய்ப்பு உள்ளது என்ற கருத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
பொதுத்தேர்வு இல்லையா:
தமிழகத்தில் கொரோனா எதிரொலியாக கடந்த 2 வருடங்களாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. அனைத்து வகுப்பு பள்ளி மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அந்த கல்வி ஆண்டின் நடத்தப்பட்ட தேர்வுகளின் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கொரோனா தாக்கம் சற்று குறைந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
மேலும் பொதுதேர்வு எழுதுவோர்களான 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு ஜனவரி, மார்ச் மாதம் நடைபெறும் என்று கால அட்டவணை வெளியானது. ஆனால் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு பற்றி அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதனால் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து ஆகுமா என்று பல்வேறு தரப்பிலிருந்து கேள்விகள் எழுந்து வருகிறது. ஜனவரி முதல் வாரத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்ததால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடந்தன. அண்மையில் பிப் 1 முதல் பள்ளிகள் கல்லூரிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு 10 விதமான பொருட்களுடன் பொங்கல் பரிசு – விநியோகம் தொடக்கம்!
இந்த நிலையில் பிப் 9 முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வு தொடங்கி தற்போது நடந்து முடிந்து விட்டது. மேலும் 2ம் கட்ட திருப்புதல் தேர்வுகள் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. ஆனால் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு குறித்து இன்னும் எந்த விதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அதற்கான ஆயத்தப் பணிகளும் கல்வித்துறை சார்பாக நடைபெறவில்லை என்று தெரிகிறது. இது 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்ற கருத்தை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.