தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – தொடக்கக்கல்வி இயக்ககம் அதிரடி உத்தரவு!

0
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு - தொடக்கக்கல்வி இயக்ககம் அதிரடி உத்தரவு!
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு - தொடக்கக்கல்வி இயக்ககம் அதிரடி உத்தரவு!
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – தொடக்கக்கல்வி இயக்ககம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல், பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவிப்பை தொடக்கக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

தொடக்கக்கல்வி இயக்ககம்:

தமிழகத்தில் கொரோனா 2வது அலை தாக்கத்தை தொடர்ந்து கொரோனா மூன்றாவது அலை பாதிப்பு நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கியது. இதனால் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெற்றது. இருப்பினும் சில வாரங்களுக்கு முன்பு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளித்து முதல்வர் உத்தரவிட்டார். அந்த வகையில் பிப்.1 முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டது. இந்நிலையில் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது, இருப்பினும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ஹோலிக்கு முன்னதாக DA உயர்வு!

மேலும் அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு 12ம் தேதி தெடங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2021-22-ம் ஆண்டுக்கான, ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறுவதாக இன்று அறிவிக்கப்பட்டிருந்தது.

பிப்.16 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – இரவு ஊரடங்கு தொடரும்! மாநில அரசு அறிவிப்பு!

இதற்கான கால அட்டவணை ஏற்கனவே வெளியான நிலையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு நடைபெறுவதாக இருந்த பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என தகவல் வெளியானது. இந்நிலையில் நாளை (பிப்.16) முதல் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு தொடங்கி நடைபெறும் என தொடக்கக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!