பிப்.16 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – இரவு ஊரடங்கு தொடரும்! மாநில அரசு அறிவிப்பு!
மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா தினசரி பாதிப்புகள் தொடர்ச்சியாக குறைந்து வருவதால் நாளை (பிப்.16) முதல் அனைத்து தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளையும் மீண்டும் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு
மாநிலம் முழுவதும் புதிய கொரோனா பாதிப்புகள் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் அனைத்து தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளையும் மீண்டும் திறக்க மேற்கு வங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக மாநில பள்ளிக்கல்வி துறையால் வழங்கப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறையை (SOP) மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஓய்வூதியம் ரூ.9,000 ஆக உயர்வு!
இப்போது கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாநிலத்தின் கொரோனா தொற்று நிலைமையை முழுமையாக மதிப்பிட்ட பின்னர் ஜூனியர் வகுப்புகளுக்கு பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறியிருந்த நிலையில், பள்ளிகளை திறக்கும் அறிவிப்பு இன்று (பிப்.15) வெளியாகியுள்ளது. இதற்கிடையில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்துள்ள அரசு, அனைத்து ICDS மையங்களும் ஒரே நாளில் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
இதற்கிடையில் மற்றொரு கொரோனா மாறுபாட்டின் சாத்தியக்கூறுகள் குறித்து பல நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில் பொது மக்கள் கவனமுடன் இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போது, மேற்கு வங்கத்தில் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பிப்ரவரி 3 ஆம் தேதியன்று பள்ளிகள் மீண்டுமாக தொடங்கி உள்ளன. கூடுதலாக, 1 முதல் 7 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்காக திறந்தவெளி வகுப்புகள் என்ற புதிய முயற்சியை அரசாங்கம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.