மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ஹோலிக்கு முன்னதாக DA உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த தவணைக்கான அகவிலைப்படி உயர்வு வரும் ஹோலி பண்டிகைக்கு முன்னதாக உயர்த்தி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஊழியர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
அகவிலைப்படி உயர்வு:
அகவிலைப்படியானது பணவீக்கத்தின் பாதிப்பை ஈடுசெய்ய அரசு தன் ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரித்து வரும் விலைவாசியை சமாளிக்க அவர்களுக்கு உதவ தொடர்ந்து உயர்த்தப்பட வேண்டும். மத்திய அரசு ஆண்டுக்கு இரண்டு முறை டிஏ மற்றும் டிஆர் சலுகைகளை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தி வழங்குகிறது. நகர்ப்புறத் துறை, அரை நகர்ப்புறத் துறை அல்லது கிராமப்புறத் துறையில் வேலை செய்வதை பொறுத்து அனைத்துப் பணியாளர்களுக்கும் DA மாறுபடும்.
பிப்.16 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – இரவு ஊரடங்கு தொடரும்! மாநில அரசு அறிவிப்பு!
50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்களை மகிழ்ச்சி அடைய வைக்கும் வகையில் வீட்டு வாடகைப் படியை (HRA) உயர்த்துவது தொடர்பான அறிவிப்புகளையும் அரசு வெளியிட வாய்ப்புள்ளது. HRA தற்போது A, B & C நகரங்களுக்கு முறையே 24 சதவீதம், 16 சதவீதம் மற்றும் 8 சதவீதம் வழங்கப்படுகிறது. எச்ஆர்ஏ, ரூ.18,000 அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம், 20 சதவீதம் மற்றும் 10 சதவீதம் என கணக்கிடப்படுகிறது. ஆனால் DA 50 சதவீதத்திற்கு மேல் இருக்கும் போது மட்டுமே இது அமலாகும்.
அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஓய்வூதியம் ரூ.9,000 ஆக உயர்வு!
7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு குறித்த அரசின் அறிவிப்பு வெளியாகும். தற்போது, மத்திய ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31 சதவீதம் வழங்கப்படுகிறது. ஹோலி பண்டிகைக்கு முன்னதாக அகவிலைப்படி (டிஏ) உயர்வு குறித்த அறிவிப்பு குறித்து மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களும், அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிலுவைகள் மற்றும் வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் காத்திருக்கின்றனர். எனவே அகவிலைப்படியை மேலும் 3 சதவீதம் உயர்த்தினால், மொத்த அகவிலைப்படி 34 சதவீதமாக உயரும்.