தமிழகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி குறித்து பயிற்சி வகுப்புகள் – அரசு அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி குறித்து பயிற்சி வகுப்புகள் - அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி குறித்து பயிற்சி வகுப்புகள் - அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி குறித்து பயிற்சி வகுப்புகள் – அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் ஏற்றுமதி இறக்குமதியாளர்கள் பயன்படும் வகையில் மூன்று நாள் இணையவழி பயிற்சியினை தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் 18 வயது நிரம்பியவர்கள் மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையவழி பயிற்சி:

இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கொரோனா பரவல் காரணமாக நாட்டில் எந்த ஒரு போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இதன் காரணமாக நாட்டில் ஏற்றுமதி, இறக்குமதி மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தது. மேலும் நாட்டின் பொருளாதாரம் மிகவும் நலிவடைய தொடங்கியது. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் விவசாய பொருட்கள் அனைத்தும் ஏற்றுமதி செய்ய முடியாமல் வீணாகியது. இதன் காரணமாக விவசாயிகள் வறுமையில் வாடும் நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது கொரோனா பரவல் குறைந்து மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். நாட்டில் பொருளாதார நிலை படிப்படியாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு வியாபாரம் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி சேவைகள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்றுமதி இறக்குமதியாளர்கள் பயன்படும் வகையில் மூன்று நாள் இணையவழி பயிற்சியினை தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் அறிவித்துள்ளது.

ICICI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வட்டி விகிதம் உயர்வு!

Exams Daily Mobile App Download

உலகமயமாக்கலின் காரணமாக ஏற்றுமதி வர்க்கத்திற்கான வாய்ப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. இந்த பயிற்சியில் ஏற்றுமதி கொள்முதலுக்கான வாய்ப்புகள், சந்தையின் தேவை, ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்ட திட்டங்கள், வங்கி நடைமுறைகள், அந்நிய செலாவணியின் மாற்று விகிதங்கள், காப்பீடு குறித்த தகவல்கள், ஏற்றுமதி-இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள் போன்றவைகளை பற்றி பயிற்றுவிக்கப்படும். மேலும், இப்பயிற்சியில் ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும், அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும் அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி காலம் 24.08.2022 நேதி முதல் 26.08.2022-ம் தேதி வரை (மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்கள் தெரிந்து கொள்ள  www.editn.in என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!