சென்னை தினத்தை முன்னிட்டு 2 நாட்கள் கலை நிகழ்ச்சி – போக்குவரத்தில் மாற்றம்! முழு விபரம் இதோ!

0
சென்னை தினத்தை முன்னிட்டு 2 நாட்கள் கலை நிகழ்ச்சி - போக்குவரத்தில் மாற்றம்! முழு விபரம் இதோ!
சென்னை தினத்தை முன்னிட்டு 2 நாட்கள் கலை நிகழ்ச்சி - போக்குவரத்தில் மாற்றம்! முழு விபரம் இதோ!
சென்னை தினத்தை முன்னிட்டு 2 நாட்கள் கலை நிகழ்ச்சி – போக்குவரத்தில் மாற்றம்! முழு விபரம் இதோ!

சென்னை மாநகராட்சி தினமாக நாளை மற்றும் நாளை மறுநாள் பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இத்தினத்தை முன்னிட்டு எலியட்ஸ் கடற்கரையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அதனால் எலியட்ஸ் கடற்கரைக்கு செல்வதில் சில போக்குவரத்து மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

சென்னை தின கொண்டாட்டம்

தமிழகத்தின் தலைநகரமாக விளங்கும் சென்னை மாநகராட்சி 1639ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி அன்று பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு ஹோகன் ஆகிய இருவரால் தோற்றுவிக்கப்பட்டது. மேலும் இவர்கள் கிழக்கிந்திய கம்பெனியை நிறுவ அய்யப்பன் மற்றும் வேங்கடப்பன் ஆகியோரிடமிருந்து தற்போது இருக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை/தலைமைச் செயலகம் இருக்கும் இடத்தை வாங்கினர். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ம் தேதி அன்று “சென்னை தினம்” கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை தினம் கொண்டாட உள்ளது. இத்தினத்தை முன்னிட்டு 2 நாட்கள் பெசன்ட் நகரில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

அந்த வகையில் பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் நாளை மாலை முதல் ஞாயிறு நள்ளிரவு வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதால் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதாவது நாளை மற்றும் நாளை மறுநாள் எலியட்ஸ் கடற்கரைக்கு செல்ல விரும்புவர்கள், 7வது அவென்யுவிற்கும் 6வது அவென்யுவிற்கும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு வருபவர்கள் 16வது குறுக்குத் தெரு வழியாக 2வது அவென்யூ நோக்கி திருப்பி விடப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி குறித்து பயிற்சி வகுப்புகள் – அரசு அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

இதே போல் 16வது குறுக்குத் தெருவில் இருந்து 6வது அவென்யூ நோக்கிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழியில் வருபவர்கள் 2வது அவென்யூ மற்றும் 16வது குறுக்குத் தெரு சந்திப்பில் திருப்பி விடப்படுவார்கள். இதையடுத்து 3வது மெயின் ரோட்டில் இருந்து 6வது அவென்யூ நோக்கி வருபவர்களுக்கு செல்ல தடை என்றும் இவ்வழிகளில் வருபவர்கள் 3வது மெயின் ரோடு, 2வது அவென்யூ சந்திப்பில் திருப்பி விடப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து எலியட்ஸ் கடற்கரையில் 4வது மெயின் ரோடு, 5வது அவென்யூவில் இருந்து 6வது அவென்யூவிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 4வது மெயின் ரோடு, 5வது அவென்யூ வழியாக திருப்பி அனுப்பப்படுவார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!