இந்தியாவில் மாற்றுத்திறனாளிகள் ரயில்களில் பயணிக்க, முன்பதிவு செய்வது குறித்த வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
நீதிமன்றம் உத்தரவு
இந்தியாவில் முக்கியமான துறைகளில் ஒன்றான ரயில்வே துறை சார்பில் பல்வேறு சலுகைகள் மக்களுக்கு வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண சலுகை வழங்கப்படுகிறது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் ரயில்களில் பயணிக்க, முன்பதிவு செய்ய UDID-ஐ கட்டாயமாக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது
குழந்தைகளுக்கு ‘இந்த’ ஆவணத்தை எடுத்தாச்சா? – தவற விடாதீங்க!
இந்த மனுவை கும்பகோணம் அருகே சுவாமிமலையை சேர்ந்த சுந்தர விமல்நாதன் என்பவர் தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததில் மத்திய அரசின் UDID அடையாள அட்டையை எங்கெங்கெல்லாம் பயன்படுத்தலாம்? என்றும் ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை கட்டணத்தில் பயணம் செய்ய UDID-ஐ பயன்படுத்தலாமா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். மேலும் இது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.