IRCTC ரயில்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – டிக்கெட் ரத்து செய்வது குறித்த முக்கிய அறிவிப்பு!

0
IRCTC ரயில்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு - டிக்கெட் ரத்து செய்வது குறித்த முக்கிய அறிவிப்பு!
IRCTC ரயில்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு - டிக்கெட் ரத்து செய்வது குறித்த முக்கிய அறிவிப்பு!
IRCTC ரயில்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – டிக்கெட் ரத்து செய்வது குறித்த முக்கிய அறிவிப்பு!

இந்திய பொதுப் போக்குவரத்து துறைகளுள் ஒன்றான ரயில் போக்குவரத்து மிகவும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து விட்டு ரத்து செய்து விட்டால் IRCTC நிறுவனம் வழங்கும் ரீஃபண்ட் தொகையை பற்றி விரிவாக பார்ப்போம்.

ரயில் பயணிகள் கவனத்திற்கு:

இந்தியாவில் பொது போக்குவரத்து சேவைகளில் ஒன்றான ரயில் போக்குவரத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய சாதாரண மக்கள் கூட பயணம் செய்ய முடிகிறது. அதனால் நாள்தோறும் ரயிலில் லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா கால கட்டத்தில் பொதுமக்களின் வருகையை கட்டுப்படுத்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே ரயிலில் பயணம் மேற்கொள்ள முடியும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்தது. தற்போது தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து முன்பதிவில்லா சேவை கட்டணத்தை மீண்டும் தொடங்கியுள்ளது.

தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விரும்புவோர் கவனத்திற்கு – விண்ணப்பிப்பது எப்படி?

அதனால் பயணிகள் தற்போது மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்கள். தற்போது ரயிலில் முன்பதிவு செய்யும் போது நெட்வொர்க் மற்றும் சர்வர் கோளாறு காரணமாக தங்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படும் ஆனால் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருக்காது. அந்த சமயத்தில் தங்களின் முழு தொகையும் மீண்டும் IRCTC நிறுவனம் வழங்குகிறது. மேலும் டிக்கெட் முன்பதிவு செய்து முடித்தபிறகு டிக்கெட்டை ரத்து செய்தால் இதற்கு ரத்து செய்யப்பட்ட நேரத்தை பொறுத்து ரீஃபண்ட் தொகை வழங்கப்படும். தற்போது இது குறித்த IRCTC விதிமுறையை பற்றி விரிவாக பார்ப்போம்.

முதலாவதாக ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரம் முதல் 12 நேரத்துக்கு முன்பு டிக்கெட்டை ரத்து செய்தால் டிக்கெட் கட்டணத்தில் 25% மற்றும் ஜிஎஸ்டியும் சேர்த்து பிடித்தம் செய்யப்பட்டு ரீஃபண்ட் வழங்கப்படுகிறது. அதே போல ரயில் புறப்படுவதற்கு 12 மணி நேரம் முதல் 4 நேரத்துக்கு முன்பு டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் 50% கட்டணமும் ஜிஎஸ்டியும் சேர்த்து பிடித்தம் செய்யப்படும். தற்போது முன்பதிவு செய்த டிக்கெட்டை 4 மணி நேரத்துக்குள் ரத்து செய்யவில்லை என்றால் ரீஃபண்ட் எதுவும் வழங்கப்படமாட்டாது என்று IRCTC நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 3,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் – 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம்!

மேலும் ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு டிக்கெட்டை ரத்து செய்தால் கீழ்க் கண்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு மீதமுள்ள தொகை வழங்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!