நாளை (செப்.26) தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகள் – உஷார்! உஷார்!
தமிழகத்தில் செப்டம்பர் 26ம் தேதியான நாளை, மின்தடை சில பகுதிகளில் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
மின்தடை:
தமிழகத்தின் மின்தடை இல்லாமல் முழுவதுமாக மின்சாரத்தை வழங்குவதை நோக்கமாக கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால், மற்ற நேரங்களில் தடை இல்லா மின்சாரத்தை வழங்குவதற்கு ஏதுவாக அனைத்து மின் நிலையங்களிலும் மாதம் தோறும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இதனால் தகுந்த முன்னறிவிப்புடன் பகுதி வாரியாக தமிழகத்தில் மின்தடை செய்யப்படுகிறது.
செப்டம்பர் 26ம் தேதியான நாளை தமிழகத்தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த போடி துணை மின் நிலைய பகுதியில் மற்றும் பெரியகுளம் துணை மின் நிலைய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளது. இதனால் அப்பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. அதன்படி, போடி துணை மின் நிலையத்தை சேர்ந்த போடி, போ.மீனாட்சி புறம், போ.அணைக்கரைப்பட்டி, குரங்கனி போன்ற பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் மின்தடை செய்யப்படுகிறது.
தமிழகத்தை உலுக்கும் பெட்ரோல் குண்டு வீச்சு.. மதுரையிலும் நிகழ்ந்த சம்பவம்… தொடரும் பதற்ற நிலை!
Exams Daily Mobile App Download
இதேபோல், பெரியகுளம் பகுதியில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக ஆண்டிபட்டி, ஏத்தக் கோயில், ராஜதானி, டி.சுப்பலா, பாலம்பக்கோட்டை, ராஜகோபாலன்பட்டி, பொம்மிநாயகன் பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 27ம் தேதி அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்