தமிழகத்தை உலுக்கும் பெட்ரோல் குண்டு வீச்சு.. மதுரையிலும் நிகழ்ந்த சம்பவம்… தொடரும் பதற்ற நிலை!
தமிழகத்தில் பல பகுதிகளிலும் சில நாட்களாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், தற்போது மதுரையில் உள்ள RSS நிர்வாகி ஒருவரின் வீட்டில் பெட்ரோல் குண்டு எறியப்பட்டுள்ளது.
பெட்ரோல் குண்டு:
தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் சித்தாபுதூர் பகுதியில் சில நாட்களுக்கு முன்பாக RSS கட்சியின் அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. இதேபோல், தமிழ்கத்தின் பல பகுதிகளிலும் பெட்ரோல் குண்டு வீசும் சம்பவம் நடந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும், ஈரோட்டிலும், பொள்ளாச்சியிலும் பாஜக நிர்வாகிகள் வீட்டில் குண்டு வீசப்பட்டுள்ளது.
பெட்ரோல் குண்டு வீச்சை எதிர்த்து பாஜக கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், சேலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மாலை 7: 40 மணி அளவில் மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அனுமந்தையர் மகன் கிருஷ்ணன் (வயது 55) வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. உடனடியாக காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை மேற்கொண்டனர்.
நீங்க தனியார் நிறுவன ஊழியரா? அப்போ உஷாரா இருங்க – வேலை பறிபோகும் அபாயம்!
Exams Daily Mobile App Download
அப்போது, அருகில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை சோதனை நடத்தினர். அப்போது அதில், இந்த சம்பவம் பதிவாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. வீடியோவில் இரண்டு மர்ம நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து மூன்று பெட்ரோல் குண்டுகளை கார் ஷெட்டின் மீது வீசுவது பதிவாகியுள்ளது. இதனால் மற்ற பகுதிகளை தொடர்ந்து மதுரையிலும் காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்