மாநிலம் முழுவதும் உள்ள தொழிற்சாலை ஊழியர்களுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு – இதற்காக தான்!
தற்போதைய நெருக்கடியை கருத்தில் கொண்டு சில அழுத்தத்தைத் தணிக்க நாளை (மே 3) ஒரு நாள் மட்டும் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டாம் என்று ராஜஸ்தான் அரசாங்கம் மாநிலம் முழுவதும் உள்ள தொழில்துறை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு
இந்தியாவில் தற்போது நிலவும் மின்தட்டுப்பாடு காரணமாக மக்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இருக்கும் மின்சாரம் சேமித்து வைக்கும் நடவடிக்கையாக ராஜஸ்தான் அரசாங்கம் ஒரு முக்கிய முடிவு எடுத்துள்ளது. அதாவது, மாநிலம் முழுவதும் நிலவும் தற்போதுள்ள நெருக்கடியை கருத்தில் கொண்டு சில அழுத்தத்தைத் தணிக்க மின்சாரத்தை பயன்படுத்த வேண்டாம் என்று தொழில்துறை நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மாநில எரிசக்தி அமைச்சர் பன்வர் சிங் பதி கூறுகையில், ‘மாநிலத்தின் மின் தேவை 13,000 மெகாவாட்டைத் தாண்டியுள்ளது.
CBSE பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 48 நாட்கள் கோடை விடுமுறை!
இது வழக்கமாக கிடைக்கக்கூடிய 10,000 மெகாவாட்டை விட அதிகமாக உள்ளது. இந்த மின் பற்றாக்குறை காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் நாங்கள் மின்வெட்டுகளை விதிக்க வேண்டியிருந்தது. இப்போது இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் விலை நான்கு மடங்கு அதிகம். ஆனால் நாங்கள் மையத்தின் உத்தரவுகளைப் பின்பற்றி அதை வாங்குகிறோம். இந்திய எரிசக்தி பரிவர்த்தனையில் யூனிட்டுக்கு ரூ. 12 செலுத்தவும் தயாராக உள்ளோம். ஆனால் மின்சாரம் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதனால் நாளை முழுவதும் மின்சாரத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று தொழிற்சாலைகளுக்கு நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம். தற்போதைய போக்கு தொடர்ந்தால் வரும் நாட்களில் மின் நிலைமையில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இது தவிர ராஜஸ்தானுக்கு நிலக்கரி விநியோகத்தை அதிகரிக்குமாறு அரசாங்கம் பலமுறை மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இப்போது நாட்டின் பெரும் பகுதிகளில் வெப்பநிலை திடீரென அதிகரித்ததன் காரணமாக, மின் தேவை அதிகரிப்பால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி குழுமம் தெரிவித்துள்ளது.