CBSE பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 48 நாட்கள் கோடை விடுமுறை!
இந்தியாவில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 4ம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 20ந் தேதி வரை 48 நாட்கள் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோடை விடுமுறை:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் மாணவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் கொரோனா அச்சுறுத்ததால் தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் அனைத்து மாநில பள்ளிக் கல்வித்துறையும் பொதுத்தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டு அனைத்து மாநில கல்வித்துறைகளும் பாட வாரியாக கால அட்டவணையை வெளியிட்டது.
தமிழகத்தில் ஆன்லைன் மூலம் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
அனைத்து மாநிலங்களிலும் தற்போது பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு மற்றும் பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோடை விடுமுறைகளையும் மாநில கல்வித்துறை அறிவித்து வருகிறது. அந்த வங்கியில் தற்போது மத்திய கல்வி வாரியாமான CBSE 48 நாட்கள் கோடை விடுமுறையை அறிவித்துள்ளது. மத்திய கல்வி வாரியம் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வை நவம்பர், டிசம்பர் மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டில் ஆண்டு பொதுத்தேர்வுக்கு பதில் இரண்டு பருவத் தேர்வுகள் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
அதன்படி கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் முதல் பருவத்தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து அடுத்த கட்ட பருவத்தேர்வு கடந்த 26ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மே மாதம் 4ம் தேதி முதல் ஜூன் மாதம் 20ந் தேதி வரை 48 நாட்கள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.