தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு 2022 – இவர்களுக்கு மட்டும் டோக்கன்! முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு 2022 - இவர்களுக்கு மட்டும் டோக்கன்! முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு 2022 - இவர்களுக்கு மட்டும் டோக்கன்! முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு 2022 – இவர்களுக்கு மட்டும் டோக்கன்! முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இது குறித்த முழு விபரங்களை இப்பதிவில் காணலாம்.

பொங்கல் பரிசு:

தமிழர் திருநாளான தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் விதமாக தமிழக அரசால் வழங்கப்படும் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு 2022ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இந்த பொங்கல் பரிசு தொகுப்பு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படும்.

தமிழகத்தில் நாளை மறுநாள் (டிச.30) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!

இந்த பரிசு தொகுப்பில் பச்சரிசி ஒரு கிலோ, வெல்லம் ஒரு கிலோ, முந்திரி, ஏலக்காய் 10 கிராம், திராட்சை தலா 50 கிராம், பாசி பருப்பு அரை கிலோ, ரவை ஒரு கிலோ , மல்லி தூள், நெய், கடுகு, சீரகம் 100 கிராம், மிளகு 50 கிராம்,புளி 200 கிராம், உளுத்தம் பருப்பு அரை கிலோ, கடலை பருப்பு 250 கிராம்,கோதுமை ஒரு கிலோ, புளி 250 கிராம், உப்பு ஒரு கிலோ, முழு கரும்பு ஆகிய 21 வகையான பொருட்கள் பாதுகாப்பாக தனித்தனி பைகளில் பேக்கிங் செய்து மக்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. ரேஷன் கடை ஊழியர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நாட்களில் உரிய நேரங்களில் கடைகளை திறந்து சிறப்பான முறையில் பரிசு பொருட்களை குடும்ப அட்டைதார்களுக்கு வழங்க வேண்டும்.

தமிழக மத வழிபாட்டு தலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து டிச.30ல் முடிவு – அமைச்சர் தகவல்!

இந்த வகையில் மக்கள் எவ்வித கூட்ட நெரிசலில் சிக்கி கொள்ளாமல் இருப்பதற்கு பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் முறை மூலம் கொடுக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 750 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகளில் நாள், நேரம் குறிப்பிட்டு டோக்கன் வழங்கப்படும் என்றும் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களில் ஒருவர் வந்து பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து ஓமைக்ரான் தடுப்பு விதிமுறைகளை பொது மக்களும், ரேஷன் கடை ஊழியர்களும் கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!