தமிழகத்தில் நாளை மறுநாள் (டிச.30) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள உள்ள அமராவதி துணை மின் நிலையத்தில் டிச.30ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதனால் அன்றைய தினம் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் மின்சார துறையில் தொடர் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் தவறாது மின் ஊழியர்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் மூலம் தடையில்லா மின் விநியோகம் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மின் பராமரிப்பு பணிகளின் போது மின் வயர்கள், கம்பிகள் போன்றவைகள் மாற்றம் செய்யப்பட்டு மின் பாதைகள் சரி செய்யப்படுகிறது. இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறுவது குறித்து அப்பகுதி செயற்பொறியாளர் மின் பயனர்களுக்கு தெரியப்படுத்துகின்றனர்.
தமிழக மத வழிபாட்டு தலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து டிச.30ல் முடிவு – அமைச்சர் தகவல்!
செய்தித்தாள், சமூக வலைதள பகுதிகளில் பகிரப்பட்டு தெரியப்படுத்தப்படுகிறது. இதனை அறிந்து மக்கள் மின் சார்ந்த பணிகளை முன்கூட்டியே செய்து உதவுகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து டிசம்பர் 30ம் தேதி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள அமராவதி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதனால் டிச.30 (வியாழக்கிழமை) அன்று கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை ஏற்பட்டுள்ள பகுதிகள்:
ஆறாவயல், தானாவயல், சாத்தம்பத்தி வேட்டைக்காரன் பட்டி, அரியக்குடி, எஸ்.ஆா்.பட்டணம், கல்லுப்பட்டி, ஊகம்பத்தி, விசாலயன்கோட்டை, மத்திய தொழில் பாதுகாப்பு படை வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.