தமிழக மத வழிபாட்டு தலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து டிச.30ல் முடிவு – அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் ஒமிக்ரான் பரவலுக்கு மத்தியில் மத வழிபாட்டு தலங்களில் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்துவது தொடர்பாக டிச.30ம் தேதியன்று முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
புதிய கட்டுப்பாடுகள்
இந்தியாவில் கடந்த 2 வாரங்களாக கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாடு தொற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதன் முதலாக கர்நாடகாவில் கண்டறியப்பட்ட இந்த ஒமிக்ரான் வகை வைரஸ் தொற்று மெல்ல பரவத்துவங்கி இதுவரை சுமார் 15க்கும் மேற்பட்ட மாநிலங்களை ஆட்கொண்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்திலும் ஊடுருவிய இந்த ஒமிக்ரான் வைரஸ் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் உயர்வதற்கு வாய்ப்புகள் இருக்கும் நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
தமிழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் – அரசுக்கு முக்கிய வலியுறுத்தல்!
இதற்கிடையில் அந்தந்த மாநிலங்களில் நிலவும் நோய் தொற்று சூழலுக்கு ஏற்றபடி 144 தடை உத்தரவு, இரவு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு வலியுறுத்தி இருக்கிறது. இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் ஒரு பகுதியாக மத வழிபாட்டு தலங்களில் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்துவது குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு – கால அட்டவணை வெளியீடு!
சென்னை அரசு பல்மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தை ஆய்வு செய்த அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பண்டிகை நாட்களில் கோவில்களில் அதிகளவு கூட்டம் கூடுவதை தவிர்க்க கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து நாளை மறுதினம் (டிச.30) முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். தவிர தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களை மட்டும் மத வழிபாட்டு தலங்களுக்குள் அனுமதிப்பது குறித்து தொற்று பரவலுக்கு ஏற்றபடி இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் தகவல்கள் பெறப்பட்டுள்ளது.