தமிழகத்தில் ஓரிரு பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை அறிக்கை:
தென் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்தது. இதில் தூத்துக்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, ஆயக்குடி (தென்காசி), கருப்பாநதி அணை (தென்காசி), பாளையங்கோட்டை, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), வத்திராயிருப்பு (விருதுநகர்), புத்தன் அணை (கன்னியாகுமரி), தேக்கடி (தேனி), ராஜபாளையம் (விருதுநகர்), சிற்றாறு (கன்னியாகுமரி) பகுதிகளில் 5 சென்டி மீட்டர் வரை மழை பெய்துள்ளது.
பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு கணக்கீடு – EPFO முக்கிய அறிவிப்பு!!
அதேசமயம் நாமக்கல் மாவட்டத்தில் குறைந்தபட்ச வெப்பம் 18.0 டிகிரி செல்சியஸ் என்றும், ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்ச வெப்பம் 35.8 டிகிரி எனவும் பதிவாகியுள்ளது. இனி வரும் நாட்களில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் பிற பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன் லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.