பான் – ஆதார் பயனர்கள் கவனத்திற்கு – அதிகரிக்கும் மோசடிகள் – இதனை செய்யாதீர்கள்! எச்சரிக்கை!
இந்தியாவில் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இரண்டுமே முக்கிய ஆவணங்களாக கருதப்படுகிறது. இந்த ஆவணங்களை வைத்து சில நபர்கள் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். பாதுகாப்பாக இருக்க பின்பற்றப்பட வேண்டிய சில வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
பான் கார்டு – ஆதார் கார்டு:
இந்தியாவில் பான் கார்டு என்பது நிரந்தர வங்கி கணக்கு எண் ஆகும். இது இந்திய வருமான வரித் துறையால் வழங்குகிறது. தற்போதுபண பரிவர்த்தனைகள் பான் கார்டு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இதர செயல்பாடுகளுக்கு பான் கார்டு பயன்படுகிறது. மேலும் வங்கிகளில் 50,000 ரூபாய்க்கு மேல் வங்கிகளில் பணம் செலுத்தவோ, எடுக்கவோ பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே போல தான் ஆதாரும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.
Follow our Instagram for more Latest Updates
இன்றைய கால கட்டத்தில் ஆதார் இல்லாமல் தனிப்பட்ட வேலை முதல் அரசு சார்ந்த, வேலைகள் வரை எதை செய்ய முடியாது என்ற நிலை வந்து விட்டது. இத்தகைய பயன்பாடுடைய ஆதார் கார்டு மற்றும் பான் கார்டை நாம் எப்போது அப்டேடாகவும் அதே நேரம் பாத்திரமாகவும் வைத்து கொள்ள வேண்டும். இல்லையெனில் மோசடி நபர்கள் கைகளில் சிக்கி விடும். அந்த நபர்கள் உங்களது வங்கி கணக்கில் இருந்து பணம் கையாடுதல் மற்றும் உங்களது கார்டை வைத்து கடன் வாங்குதல் போன்ற செயல்பாடுகளால் ஈடுபடுகின்றனர்.
jio vs Vi தீபாவளி சலுகை 2022 – சிறப்பான ரீசார்ஜ் திட்டத்திற்கான முழு விபரம் இதோ!!
Exams Daily Mobile App Download
அதனால் உங்களது பான் மற்றும் ஆதார் அட்டை விவரங்களை தெரியாத நபர்களிடம் கொடுக்க கூடாது. மேலும் ஆதார், பான் எண் மற்றும் அதன் பிற விவரங்களை யாரிடமும் பகிர கூடாது. உங்கள் சிபில் மதிப்பெண் குறித்து சந்தேகம் இருந்தால் வங்கி கிளையை அணுகி விசாரிக்கவும். தவறு இருந்தால் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும். நீங்கள் ஜெராக்ஸ் எடுக்கும் போது அசல் ஆவணத்தை மறக்காமல் கையொடு எடுத்து வர வேண்டும் இல்லையெனில் மோசடி செய்யும் நபர்கள் கைகளில் சிக்க வாய்ப்புள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்