இரக்கம் இல்லாமல் அதிகரித்த தங்கம் விலை.. ஷாக்காக்கும் இன்றைய விலை நிலவரம் இதோ!
தமிழகத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது. இன்றைய காலை நேர நிலவரப்படி தங்கம் ரூ. 80 சவரனுக்கு அதிகரித்துள்ளது. வாரத்தின் தொடக்க நாளான இன்று ஆபரணத்தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது அதிருப்தியை ஏற்படுத்துகிறது.
தங்கம் விலை:
தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த விலை உயர்வினால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு நகைகள் வாங்குவோர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மறுபுறம் தங்கத்தின் மீது முதலீடு செய்தவர்களுக்கு லாபம் அதிகரித்து கொண்டே செல்கிறது.
Follow our Instagram for more Latest Updates
நேற்று (25/12/2022) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கத்தின் விலையானது எந்த மாற்றமும் இல்லாமல் சனிக்கிழமை விலையிலேயே ஒரு கிராம் ரூ. 5,076க்கு ஒரு சவரன் ரூ. 40, 608 க்கு விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் இன்று (26/12/2022) காலை நேர நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ. 80 அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு – கால அவகாசம் நீட்டிக்கப்படுமா? அமைச்சர் பதில்!
Exams Daily Mobile App Download
இதனையடுத்து ஒரு சவரன் ரூ. 40, 688க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.10 உயர்ந்து ரூ.5086க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வெள்ளி கிராம் ஒன்று ரூ.74.00ஆகவும் ஒரு கிலோ வெள்ளி ரூ.74,000 ஆகவும விற்பனையாகி வருகிறது.