தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு – கால அவகாசம் நீட்டிக்கப்படுமா? அமைச்சர் பதில்!
தமிழகத்தில் மின் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் வரும் 31ம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இந்த நிலையில் கால அவகாசம் நீட்டிப்பு குறித்து மின்சாரத்துறை அமைச்சர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
கால அவகாசம்:
தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதலின் பேரில் இப்பணியானது தற்போது தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதற்காக மின்சாரத்துறை சார்பாக சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது. பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களை தவிர பிற நாட்களில் இந்த முகாம்கள் வழக்கம் போல செயல்பட்டு வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
இதனை பயன்படுத்தி தற்போது வரை சுமார் 1.40 கோடி மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துள்ளனர். அத்துடன் ஆன்லைன் வாயிலாகவும் ஆதாருடன் மின் இணைப்பு எண்ணை இணைப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க டிச.31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மின்தடை அறிவிப்பு.. தமிழகத்தில் டிச.28 இந்த பகுதிகளில் பவர் கட்!
Exams Daily Mobile App Download
இன்னும் 5 நாட்களில் இந்த கால அவகாசம் முடிவடையவுள்ள நிலையில் அதனை நீட்டிக்க வேண்டி கோரிக்கைகள் எழுந்தது. இது குறித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க முதல்வர் முக ஸ்டாலினுடன் ஆலோசிக்கப்படவுள்ளது. இன்னும் 2 நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.