தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அதிகபட்ச வெப்பநிலை காரணமாக மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், இனி வரும் நாட்களில் கோடை வெப்பத்தை நினைத்து மக்கள் அச்சப்பட தொடங்கியுள்ளனர்.
வானிலை அறிக்கை:
கடந்த 24 மணி நேரத்தின் நிலவரப்படி தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் எந்த இடத்திலும் மழைப்பொழிவு பதிவு செய்யப்படவில்லை. இப்பகுதிகளில் முழுவதுமாக வறண்ட வானிலையே நிலவியுள்ளது. மேலும் இன்று முதல் மார்ச் 30ம் தேதி வரை இதே வானிலை நிலவரம் நிலவக்கூடும். மார்ச் 31 மற்றும் ஏப்ரல் ஒன்றாம் தேதி தென் தமிழகத்தின் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதம் ரூ.52,000/- ஊதியத்தில் கோயம்புத்தூரில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
அடுத்து வரும் நான்கு நாட்கள் அதிகபட்ச வெப்பநிலை நிலவக் கூடும் என்பதால், மக்கள் மிகவும் கவனத்துடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மீனவர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்புகள் வானிலை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.