ஓய்வூதிய திட்டங்களில் SIP அமைப்பது எப்படி எனபது குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
SIP அமைப்பது எப்படி:
தற்போதைய கால கட்டத்தில் சேமிப்பு என்பது இன்றியமையாத ஒன்றாகியுள்ளது. எனவே அனைவரும் பல்வேறு முறைகளில் தங்களது சேமிப்பினை மேம்படுத்தி வருகின்றனர். இதில் SIP முக்கிய பங்கு வகித்து வருகிறது. அரசு சார்பில் பல்வேறு ஓய்வூதிய திட்டங்கள் திட்டங்கள் இயங்கி வருகிறது. NPS இன் கீழ் SIP பதிவு செய்வது எப்படி என்பது குறித்து கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாதம் ரூ.30,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
வாடிக்கையாளர்கள் தங்களது PRAN எண் மற்றும் DOB ஐ சமர்ப்பித்து அதன் பின் மின்னஞ்சல் ஐடி அல்லது மொபைல் எண் அல்லது இரண்டையும் தேர்ந்தெடுத்து “OTP ஐ பெற வேண்டும். அதன் பின் NPS இல் புதிய SIP பதிவு” மற்றும் “Submit” என்பதை கிளிக் செய்து விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின் அதில் கேட்கப்படும் SIP தொகை, அடுக்கு வகை, SIP தேதி, முதிர்வு மாதம் மற்றும் ஆண்டு மற்றும் SIP அதிர்வெண் ஆகியவற்றை தேர்வு செய்ய வேண்டும். இறுதியாக இந்த பதிவானது வங்கியின் அங்கீகாரத்திற்காக அனுப்பப்படும். அதனை தொடர்ந்து SIP தொகை மற்றும் SIP அதிர்வெண்ணின் படி சந்தாதாரர்களின் வங்கிக் கணக்கிலிருந்து தொகை டெபிட் செய்யப்படும்.