திருச்சிராப்பள்ளியில் உள்ள வாழைப்பழத்திற்கான தேசிய ஆராய்ச்சி மையத்தில் (NRCB) காலியாக உள்ள Young Professional-I பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 10.04.2024 க்குள் மின்னஞ்சல் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் | தேசிய ஆராய்ச்சி மையம் (NRCB) |
பணியின் பெயர் | Young Professional-I |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.04.2024 |
விண்ணப்பிக்கும் முறை |
NRCB காலிப்பணியிடங்கள்:
Young Professional-I பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
YP கல்வித்தகுதி:
NRCB அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Master Degree in M.Sc in the field of Agricultural Plant Pathology or Microbiology or Biotechnology முடித்திருக்க வேண்டும்.
ஆதார் அட்டை தொடர்பான புதிய விதி – தேர்தல் ஆணையம் பரிந்துரை!
வயது வரம்பு:
வாழை ஆட்சேர்ப்புக்கான தேசிய ஆராய்ச்சி மையத்தின்படி, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 45 வயதுடையவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
சம்பள விவரம்:
மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.30,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
YP தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் 10-04-2024 அன்று அல்லது அதற்கு முன் [email protected] என்ற மின்னஞ்சல் ஐடிக்கு பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் தங்கள் விண்ணப்பத்தை அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2024 Pdf