தமிழக அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இன்றே கடைசி நாள் – உடனே விண்ணப்பிக்கவும்!
அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐ.டி.ஐ.) மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாள் என்பதால் விரைவில் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை
தமிழகத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐ.டி.ஐ.) மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும், அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் சேருவதற்கு இன்றே கடைசி நாள் என்பதால் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இணையதள முகவரி பக்கத்தின் மூலமாக விண்ணப்பித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – விடைத்தாள் நகல் வெளியீடு!
மேலும், எளிதாக மாணவர்கள் இந்த தொழிற்பயிற்சி நிறுவனங்களில் சேருவதற்கு உதவியாக மாநிலம் முழுவதும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த தொழிற்பயிற்சி நிறுவனங்களில் மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது அசல் ஆவண சான்றுகளான மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகிய அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மேலும், அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர விரும்பும் மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்கிற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Twitter Page for More Latest News Updates