TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கான அறிவிப்பு – இன்றே கடைசி நாள்! இதற்காக தான்!
குரூப் 4 தேர்விற்கான விடைக்குறிப்பினை TNPSC கடந்த வாரம் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், அந்த விடைகுறிப்பில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் இன்று மாலை 5.45 மணிக்குள் தெரிவிக்கும்படி TNPSC அறிவித்துள்ளது.
குரூப் 4 தேர்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1, குரூப் 2, 2A மற்றும் குரூப் 4 ஆகிய தகுதித் தேர்வின் அடிப்படையில் திறமையான தேர்வாளர்களை தேர்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் 7031 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. கிட்டத்தட்ட 18.50 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதியுள்ளனர். அதாவது, ஒரு பணியிடத்திற்கு மட்டுமே 253 பேர் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், கண்டிப்பாக குரூப் 4 தேர்வின் கட் ஆப் மதிப்பெண் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில், கடந்த வாரம் குரூப் 4 தேர்விற்கான விடைக்குறிப்பு வெளியிடப்பட்டது. இந்த விடைகுறிப்பில் ஏதேனும் பிழைகள், ஆட்சேபனைகள் இருந்தால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரபூர்வமான இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று ஆட்சேபனை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், TNPSC வெளியிட்டுள்ள விடைக்குறிப்புடன் ஒப்பிட்டு பார்த்து ஆட்சேபனைகள் அறிவிக்கப்பட்டு வந்தது.
தமிழகத்தில் கனமழை காரணமாக வானிலை மையம் எச்சரிக்கை – எண்ணுரில் 1ம் எண் புயல் கூண்டு ஏற்றம்!
மேலும், விடைகுறிப்பில் உள்ள ஆட்சேபனைகளை தெரிவிக்க இன்றே கடைசி நாள் என்பதால் இன்று மாலை 5.45 மணிக்குள் தெரிவித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்விற்கான விடைகுறிப்பில் ஆட்சேபனை இருந்தால் www.tnpsc.gov.in என்கிற மின்னஞ்சல் மூலமாக அனுப்பும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் மாதத்தில் குரூப் 4 தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்படும் எனவும், நவம்பர் மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் என TNPSC அறிவித்துள்ளது.