தமிழகத்தில் கனமழை காரணமாக வானிலை மையம் எச்சரிக்கை – எண்ணுரில் 1ம் எண் புயல் கூண்டு ஏற்றம்!
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் ஒடிசா வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக கடலுக்கு செல்லும் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை இரண்டும் பரவலாக மழை பொழிவை தரக்கூடியவை ஆகும். இதில் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலும், வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரையிலும் நீடிக்கும். தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கி பின்பு படிப்படியாக வடகிழக்கு இந்தியா முழுவதும் பரவ தொடங்கும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி விட்டதாகவும் மேலும் மழையின் அளவு இயல்பை விட அதிகமாக இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் இந்தியாவில் மஹாராஷ்டிரா மற்றும் மும்பை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இது கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் பெய்த மழையை விட அதிகம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதே போல் கேரள மாநிலத்தில் கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
NEET UG 2022 தேர்விற்கான விடைக்குறிப்பு வெளியீடு? பதிவிறக்க வழிமுறைகள் இதோ!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர் மழையினால் அணைகளில் நீர் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதனையடுத்து சென்னை மாவட்டம் எண்ணூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் கடலோர மக்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.