தமிழகத்தில் இன்று 3ம் நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் – முதல்வரின் முக்கிய அறிவிப்புகள்! விவரம் இதோ!
தமிழகத்தில் 2022ம் ஆண்டுக்கான 2 – வது சட்டசபை கூட்டத் தொடர் கடந்த 17ம் தேதி தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தொடரில் முக்கிய தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று நடைபெறும் 3ம் நாள் கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
கூட்டத்தொடர்:
தமிழகத்தில் தற்போது ஆண்டின் 2-வது சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022-23 ம் ஆண்டுக்கான முதல் துணை மதிப்பீட்டை தாக்கல் செய்தார். இதில் மொத்தம் ரூ 3795.72 கோடி ரூபாய் புதிய திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் துணை மானியக் கோரிக்கைகளை விளக்கி கூறும் வகையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று 3-வது நாளாக (அக்.19) சட்ட பேரவையில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சட்டம் 110 விதியின் கீழ் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
Follow our Instagram for more Latest Updates
அப்போது பேசிய அவர், அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்துவதே அரசின் நோக்கம் என்று தெரிவித்தார். மேலும் சிங்கார சென்னையில் 2.0 நிதியின் கீழ் சாலைகள் சீரமைக்கப்படும். அரசு பள்ளிகளில் ரூ.1050 கோடி ரூபாய் செலவில் 7,200 வகுப்பறைகள் கட்டப்படும் என்று தெரிவித்தார். அத்துடன் தமிழகத்தில் 1000 புதிய பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கல்வி நிலையங்களில் நிகழும் மரணங்கள் – நீதிமன்றம் வெளியிட்ட புதிய உத்தரவு!
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியுடன் 2,213 டீசல் மற்றும் 500 மின்சார பேருந்துகள் வாங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு தடை சட்ட மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது.