தமிழகத்தில் கல்வி நிலையங்களில் நிகழும் மரணங்கள் – நீதிமன்றம் வெளியிட்ட புதிய உத்தரவு!

0
தமிழகத்தில் கல்வி நிலையங்களில் நிகழும் மரணங்கள் - நீதிமன்றம் வெளியிட்ட புதிய உத்தரவு!
தமிழகத்தில் கல்வி நிலையங்களில் நிகழும் மரணங்கள் - நீதிமன்றம் வெளியிட்ட புதிய உத்தரவு!
தமிழகத்தில் கல்வி நிலையங்களில் நிகழும் மரணங்கள் – நீதிமன்றம் வெளியிட்ட புதிய உத்தரவு!

தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் பள்ளிகளில் இயற்கைக்கு மாறான மரணங்கள் நடந்தால் அந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் தற்போது புதிய உத்தரவை நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

நீதிமன்றம் உத்தரவு:

தமிழக பள்ளிகளில் மாணவர்களின் தற்கொலை செய்திகளின் எண்ணிக்கை அதிகமாக வந்த வண்ணம் இருக்கிறது. ஆனால் கடந்த ஜூலை மாதம் கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி பள்ளி கட்டிடத்தில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அதனால் வன்முறையாளர்கள் பள்ளியை சூறையாடியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது சென்னை உயர் நீதிமன்றம் கல்வி நிறுவனங்களில் நிகழும் இயற்கைக்கு மாறான மரணங்களை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில் இந்த உத்தரவால் சிபிசிஐடி போலீசின் வழக்கமான பணிகள் பாதிக்கப்படுவதாகவும், அதனால் வழக்கு குறித்த நீதிமன்ற உத்தரவை மாற்றி அமைக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி சதிஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அதில் மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கூறுகையில், ஜூலை 18 ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்ட பின் கல்வி நிறுவனங்களில் நிகழ்ந்த 11 மரணங்கள் குறித்த வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்துள்ள பிரபல நிறுவனம் – பல ஆண்டு கால ஆராய்ச்சிக்கு கிடைத்த வெற்றி!

Exams Daily Mobile App Download

அதனால் உயர் நீதிமன்ற உத்தரவு காரணமாக சிபிசிஐடி போலீசின் வழக்கமான பணிகள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் கல்வி நிறுவனங்களில் நிகழும் மரணம் குறித்து கல்வித்துறை விசாரித்த பிறகே கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதால் அதனால் ஆதாரங்கள் அழிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். இந்த வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இனி கல்வி நிலையங்களில் நிகழும் மரணங்கள் குறித்து சம்பந்தப்பட்ட போலீசார் விசாரணை செய்யலாம் எனவும் கல்வித்துறை விசாரணைக்கு பின்னர் தான் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவை மாற்றி அமைத்துள்ளார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!