புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்துள்ள பிரபல நிறுவனம் – பல ஆண்டு கால ஆராய்ச்சிக்கு கிடைத்த வெற்றி!
உலகம் முழுவதும் உள்ள அனைத்து முன்னணி மருந்து ஆராய்ச்சி நிறுவனங்களும் பல ஆண்டுகளாக புற்றுநோய்க்கு தடுப்பு மறுத்து கண்டுபிடிக்க போராடி வரும் நிலையில், பிரபல நிறுவனம் ஒன்று தனது முயற்சியில் வெற்றியை கண்டுள்ளது.
புற்றுநோய் தடுப்பூசி:
உலகம் முழுவதும் கடந்த 20 ஆண்டுகளில் அதிகம் மக்களை பாதித்து வருவது புற்றுநோய் தான். இந்த வார்த்தை முன்னொரு காலத்தில் மிகவும் அரிதாக உச்சரிக்கப்பட்டு வந்த நிலை இருந்தது. ஆனால் சமீப வருடங்களில் சிறு வயது குழந்தைகளை கூட புற்றுநோய் அதிக அளவில் பாதித்து வருகிறது. பல வருடங்களாக புற்றுநோய்க்கு உலகின் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன.
Follow our Instagram for more Latest Updates
இந்த முயற்சியில் கோவிட்-19 தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த Pfizer/BioNtech என்ற நிறுவனம் புற்றுநோய்க்கான தடுப்பூசியை வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளது. ஜெர்மன் நிறுவனமான BioNTech பல்வேறு வகையான புற்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை பல ஆண்டு ஆராய்ச்சிக்கு பின்னர் கண்டுபிடித்துள்ளனர்.
தமிழகத்தில் இனி ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை – இன்று (அக்.19) சட்ட மசோதா தாக்கல்!
Exams Daily Mobile App Download
இந்த நிறுவனத்தின் அதிபர் சாஹின் அவர்கள் 2030-க்கு முன்னரே புற்றுநோய் தடுப்பூசி மிகவும் பரவலாக கிடைக்க ஆரம்பித்து விடும் என்று தெரிவித்துள்ளார். மேலும், தடுப்பூசிக்கான பல சோதனைகள் ஏற்கனவே நடந்து வருகின்றன என்றும், கொரோனா காலத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்து இந்த மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் நிறுவனம் செயல்பட்டதாகவும் கூறியுள்ளார். உலகை அரித்து வரும் புற்று நோய்க்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மருத்துவ உலகில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.