தமிழகத்தில் இனி ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை – இன்று (அக்.19) சட்ட மசோதா தாக்கல்!
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகள் விடுத்த நிலையில் இது குறித்து ஆராயப்பட்டு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது தமிழக சட்டத்துறை அமைச்சர் இன்று ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டம் தடை:
இந்தியா முழுவதும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு மிகவும் பிரபலமாக உள்ளது. குறிப்பாக இந்த விளையாட்டிற்கு இளைஞர்கள் தான் அதிகம் அடிமையாகி உள்ளனர். இந்த ரம்மி விளையாட்டு மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என்ற ஆசையில் மக்கள் தங்களிடம் உள்ள மொத்த பணத்தையும் முதலீடு செய்து கடைசியில் அதனை இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். சிலர் இதனால் மனமுடைந்து தற்கொலை செய்யும் அளவுக்கு செல்கின்றனர். இப்படிப்பட்ட ஆபத்தான விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் கோரிக்கைகள் எழுந்தது.
Follow our Instagram for more Latest Updates
அப்போது சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதற்கான அறிவுரைகள் வழங்க அரசு உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் மக்களிடம் இணையதள விளையாட்டுகள் குறித்து மின்னஞ்சல் வாயிலாகவும் கருத்துகள் பெறப்பட்டது. இதன் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த சட்டத்திற்கு தமிழக ஆளுநர் அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு – மாணவர்களே உஷார்! மீறினால் நடவடிக்கை!
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து தமிழக அரசு கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு நிரந்தர சட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவித்தது. மேலும் ஒரு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் அதற்கான சட்டம் இயற்ற வேண்டும். அதன்படி இன்று (அக்.19) தமிழக சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.