தமிழகத்தில் ‘ இந்த ‘ மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கனமழை:
தமிழகத்தில் பள்ளிகளுக்கு செப்டம்பர் மாதம் நடந்த காலாண்டு தேர்வுகளுக்கு பிறகு தொடர் விடுமுறைகள் அளிக்கப்பட்டது. இந்த விடுமுறை அக்டோபர் 9ம் தேதியோடு முடிந்து அக்டோபர் 10ம் தேதியான நேற்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதேபோல், கல்லூரிகளுக்கும் ஆயுதபூஜை காரணமாக தொடர் விடுமுறைகள் அளிக்கப்பட்டு சமீபத்தில் தான் மீண்டும் திறக்கப்பட்டது.
விடுமுறை காலங்களிலும் கூட மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்புகளை ஈடு செய்வதற்காக அனுமதி பெற்று பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டது. ஏனென்றால் கொரோனா கால இடைவெளிக்கு பிறகு நடப்பு கல்வி ஆண்டில் தான் மாணவர்கள் முழு பாடத்திட்டத்தையும் தேர்வெழுத இருக்கின்றனர். இதனால் பாடத்திட்டங்களை ஆசிரியர்கள் விரைவாக நடத்தி வருகின்றனர். மேலும், மாணவர்களும் தேவையில்லாமல் தனிப்பட்ட விடுமுறை எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Exams Daily Mobile App Download
தற்போது, தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்து வருவதால், அக்டோபர் 11ம் தேதியான இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்