தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இந்தியாவில் தலைநகர் டெல்லியில் தற்போது காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. இதனால் டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் வரும் 24ம் தேதி தீபாவளி பண்டிகை வரவுள்ளதால் தடையை நீக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணையில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பட்டாசு வெடிக்க தடை:
டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல விதமான உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் சுவாச கோளாறு, ஒவ்வாமை நோயால் அவதிப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் வயதானவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. அதனால் டெல்லியில் காற்றின் தரத்தை மேம்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டாசு வெடிக்கும் போது அதில் இருந்து வெளியேறும் நச்சு புகையால் காற்று மாசு மேலும் அதிகரிக்கும். அதனால் 2023 ஜனவரி 1ம் தேதி வரை டெல்லியில் பட்டாசு வெடிக்க அரசு தடை விதித்தது. இந்த அறிவிப்பு பட்டாசு விற்பனையாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நடப்பு ஆண்டு அக்டோபர் 24 தீபாவளி பண்டிகை வரவுள்ளதால் பட்டாசு வெடிக்க அறிவிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது தான் நகை வாங்க நல்ல சான்ஸ்.. அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை – இல்லத்தரசிகள் ஹாப்பி!
Exams Daily Mobile App Download
இந்த மனுக்களின் மீதான விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மாட்டோம் என்று கூறி மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தீபாவளி விடுமுறைக்கு முன் மீண்டும் விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் பட்டாசு உற்பத்தி அளவு குறைந்துள்ளதாக தொழிலாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்