அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை – கனமழை எதிரொலி!
கரூர் மாவட்டத்திற்கு இன்று (அக்டோபர் 1) ஒரு நாள் மட்டும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழகம் முழுவதும் கொரோனா 2ம் அலை பரவல் குறைந்து வந்ததை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், இது சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே தமிழகத்தில் கிட்டத்தட்ட 15 மாவட்டங்களில் அடுத்து வரும் சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
சென்னை மெட்ரோ திட்ட பணிகளுக்கு ரூ.2,600 கோடி – ஏஐஐபி வங்கி கடனுதவி!
அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக இன்று (அக்டோபர் 1) ஒரு நாள் மட்டும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவில், ‘கரூர் மாவட்டத்தில் நேற்று (செப்டம்பர் 30) இரவு துவங்கி பரவலாக அனைத்து இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று (அக்டோபர் 1) காலை 8 மணி நிலவரப்படி, கரூரின் வெவ்வேறு இடங்களில் அதிகபட்சமாக 80 மிமீ மழையும், குறைந்தபட்சமாக 20 மிமீ மழையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
SBI ATM கார்டு வைத்திருப்பவரா நீங்கள்? கடன் வாங்கும் எளிய வழிமுறைகள் இதோ!
அதனால் மாவட்டம் முழுவதும் மழை நிவாரணப்பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்தாலும் ஆங்காங்கே மழை நீர் தேங்கி இருப்பதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது’ என குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அக்டோபர் 1 முதல் 4ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.