சென்னை: கிடுகிடுவென உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை – இன்றைய (அக்.1) நிலவரம்!
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை நேற்றிலிருந்து இன்றும் விலை சற்று அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்வது வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
அக்-1 பெட்ரோல், டீசல் விலை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழக அரசு பட்ஜெட் தாக்கலில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து அறிவித்திருந்தாலும் கூட தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் விதமாக நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக அனைத்து மக்களும் இப்போது தான் பொருளாதார ரீதியாக முன்னேறி வருகின்றனர்.
அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை – கனமழை எதிரொலி!
அதனை தொடர்ந்து வாழ்வின் அன்றாட தேவைகளுக்கு வாங்கும் மளிகை, காய்கறி உட்பட்ட அனைத்து பொருட்களும் விலைவாசி உயர்ந்து காணப்படுகிறது. இதனை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னையில் பெட்ரோல், டீசல் விலையானது சற்று குறைந்து காணப்பட்டது. பின்னர் கடந்த 2 நாட்களாக உயர்ந்த நிலையிலேயே காணப்பட்டு பெட்ரோல் 1 லிட்டர் 99.36 ரூபாய்க்கும், டீசல் 1 லிட்டர் 94.45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று (அக்-1) நிலவரப்படி விலை இன்னும் அதிகரித்து காணப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,612 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!
பெட்ரோல் விலை 1 லிட்டருக்கு 22 காசுகள் உயர்ந்து 99.58 ரூபாய்க்கும், டீசல் 1 லிட்டருக்கு 29 காசுகள் உயர்ந்து 94.74 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் கூடிய விரைவில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் ரூ.100க்கும் அதிகமாக வாய்ப்பு உள்ளதாக அறிவுறுத்தப்படுகிறது. இந்நிலையில் பெரும்பாலானோர் வெகுதூரம் பயணம் செய்து வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.