தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,612 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி, 1,612 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களை விட இன்று சற்று பாதிப்பு குறைந்துள்ளது.
கொரோனா உறுதி:
தமிழகத்தில் கடந்த வாரம் முதல் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு மெல்ல அதிகரித்து வந்தது. இந்நிலையில், தொடர்ந்து பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும்,தீவிரப்படுத்தப்பட்டு தளர்வுகள் நீக்கப்படும் என்று மக்கள் அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில், பாதிப்பு மீண்டும் குறைந்து இயல்பு நிலையை அடைந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தின் மொத்த கொரோன பாதிப்பு பற்றிய அறிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
IPL 2021 – SRH vs CSK: சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
அதன்படி, தமிழகத்தில் புதிதாக 1,612 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,63,789ஆக அதிகரித்து உள்ளது. மேலும், புதிதாக தொற்று பாதிப்பினால் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,575 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் இன்று மட்டும் 1,626 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
13 பிராந்திய மொழிகளில் பொதுத்துறை வங்கிகளின் எழுத்தர் தேர்வுகள் – நிதி அமைச்சகம் பரிந்துரை!
இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 26,11,061ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும், தமிழகத்தில் 1,53,327 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் தற்போது வரை 4,69,93,842 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் நேற்று 184 பேர் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்த நிலையில், இன்று 189 ஆக பாதிப்பு பதிவாகியுள்ளது.