இந்தியாவின் கடந்த 24 மணி நேரத்தில் 389 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதாரத்துறை தகவல்!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 889 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் குணமடைந்தோர் மற்றும் தடுப்பூசி குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது .
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. இந்த தடுப்பூசிகள் மூலம் பாதிப்பு எண்ணிக்கை கடந்த ஆண்டை விட தற்போது குறைந்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 389 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த நாட்களை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 4,46,71,219- ஆக உயர்ந்துள்ளது. அதனை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5,395 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.
ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென சரிவு – மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!
Exams Daily Mobile App Download
மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4.41 கோடி பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. அத்துடன் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,30,608 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 219.89 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.