ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி உயர்வு – இன்றைய விலை நிலவரம் என்ன?
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சரிந்து வந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்த அதிரடி விலை உயர்வு நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது இன்றைய தங்கத்தின் நிலவரம் குறித்து விரிவாக பார்ப்போம்.
தங்கம் விலை
தமிழகத்தில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் தங்களின் சேமிப்பு பணத்தை தங்கத்தின் மீது தான் அதிக முதலீடுகளை செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து அதன் விலையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
Follow our Instagram for more Latest Updates
தங்கம் விலையில் தொடர்ந்து 4வது நாளாக சரிந்து வந்த நிலையில் இன்று அதிரடி உயர்வை கண்டுள்ளது. நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4, 896 என விற்பனை ஆன நிலையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து 4, 931 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் நாளை தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் – முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!
Exams Daily Mobile App Download
சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.39,168 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 39,448-க்கு விற்பனையாகிறது. இதே வெள்ளியின் விலையும் அதிரடியாக உயர்ந்து கிராமுக்கு ரூ.68.20 எனவும், ஒரு கிலோ ரூ.68,200 எனவும் விற்பனை செய்யப்படுகிறது.