தமிழகத்தில் நாளை தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் – முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!
மதுரை மாவட்டத்தில் வேலை வாய்ப்பை தேடி வருபவர்களுக்கு உதவும் வகையில் நாளை (வெள்ளிக்கிழமை) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் பல முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று வேலைவாய்ப்புகளை வழங்கவுள்ளனர்.
வேலைவாய்ப்பு முகாம்:
மதுரை மாவட்டத்தில் நாளை (25.11.2022) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமானது கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் காலை 10 மணிக்கு தொடங்கும் என்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குனர் தெரிவித்துள்ளார். இதில் பிரபல தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளனர்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதனால் தற்போது வேலை வாய்ப்பை நாடுவோர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முகாமிற்கு வருபவர்கள் தங்களின் கல்வித்தகுதி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சுயவிவரக்குறிப்பு உள்ளிட்ட ஆவணங்களை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
டிசம்பர் 1 முதல் பள்ளிகளில் நேர மாற்றம் – மாநில அரசு புதிய அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இந்த முகாமில் 10ம் வகுப்பு முதல் பட்ட படிப்பு முடித்தவர்கள் வரை பங்கேற்கலாம். அவரவர் கல்வி தகுதிகளுக்கேற்ப வேலைகள் வழங்கப்படும் என்று தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் வேலை தேடும் நபர்கள் மற்றும் வேலை வாய்ப்பை அளிக்கவுள்ள நிறுவனங்கள் முன்கூட்டியே http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.