Gold Rate: தங்கம் விலை ஒரே நாளில் அதிரடி உயர்வு – இன்றைய நிலவரம் என்ன?
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சரிந்து வந்த தங்கத்தின் விலை இன்று (10.11.2022) அதிரடியாக உயர்ந்துள்ளது. தற்போது இன்றைய தங்கத்தின் நிலவரம் குறித்து பார்ப்போம்.
தங்கம் விலை
தமிழகத்தில் தங்கத்தை வாங்கி பெரும்பாலான சேமிக்க தொடங்கி உள்ளனர். மேலும் தங்களின் சேமிப்பு பணத்தை பாதுகாப்பான முறையில் முதலில் செய்வதற்காக தங்கத்தின் மீது ஏராளமானோர் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் தங்கத்தின் மீது இருக்கும் ஆர்வம் ஒருபோதும் மக்களுக்கு குறைவதில்லை.
Follow our Instagram for more Latest Updates
மேலும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்கத்தை வாங்குவார்கள். அதனால் அச்சமயத்தில் தங்கத்தின் விலையானது அதிரடியாக உயரும். அதன்படி கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உயர்ந்த தங்கத்தின் விலை கடந்த வாரங்களில் சரிய தொடங்கியது. அதன்படி ஒரு சவரன் தங்கம் ரூ.37 ஆயிரத்திற்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு தனி கல்வி கொள்கை – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!
Exams Daily Mobile App Download
அந்த வகையில், நேற்றைய விலையை விட இன்று காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலையானது 22 கேரட் சவரனுக்கு ரூ.40 அதிரடியாக உயர்ந்து ரூ.38,560 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,820க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், வெள்ளியின் விலையானது இன்று 40 காசுகள் குறைந்து, ஒரு கிராம் ரூ.67 ஆகவும், ஒரு கிலோ ரூ.67,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.