தமிழ்நாட்டிற்கு தனி கல்வி கொள்கை – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!
தமிழகத்திற்கென்று தனியாக மாநில கல்வி கொள்கை கொண்டு வரப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனி கல்வி திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
கல்வி திட்டம்:
தமிழக கல்வி முறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழக அரசு கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு கல்வியின் தரத்தை தீர்மானிக்க மட்டுமே மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் மாணவர்கள் இந்த மொழியில் தான் கல்வி கற்க வேண்டும் என்று கூறுவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று தெரிவித்துள்ளது. அதனால் மீண்டும் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் தனியாக மாநில கல்வி கொள்கை உருவாக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப்பை தொடர்ந்து பேஸ்புக்கிற்கும் வந்த சிக்கல்.. Login கூட செய்யமுடியாமல் தவித்த பயனர்கள்!
Exams Daily Mobile App Download
அண்மையில் இது குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில திட்ட குழு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், ஆலோசகர்கள் என அனைவரும் பங்கேற்றனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மாநில கல்வி கொள்கை மூலம் எங்கள் மாநில பிள்ளைகளுக்கு என்ன தேவையோ அதை நாங்களே வடிவமைத்து கொள்வோம் என்று கூறியுள்ளார்.